Tuesday, 12 August 2008

நானுன்னை இனி எங்கு தேடுவேன்?

கடல் கொந்தளித்தது
ஜனங்களின் மனங்களைப் போல!
பனிக்காற்று உடலைத் துளைத்தது
கூரிய ஊசிகளைப் போல!
மேகம் நிலவுக்கு விடை கொடுத்து
மூளியாய் இருண்டு கிடந்தது!
வலது கண் அடிக்கடி துடித்தது!
கனவுகள் திரைகளாய்
து}க்கத்தை மறைத்தது!
இதயம் தாய் மண்ணை
நினைத்து தவித்தது!
நாழிகள் மரத்தனமாய்
ஓட மறுத்தது!
மின்னல் கோடிட்டு
இடியொன்று முழங்கியது!
கம்பிகளுடாய் சேதிகள் வந்தது
களத்தில் அவன் காவியமானான் என்று!!!

கடலும் காற்றும் பனியும் மேகமும்
நிலவும் உலக ஒலிகளும்
எங்கோவொரு அந்தத்தில்
அடைந்து போயின!
ஸ்தம்பித்த பூமியில், ஜில்லிட்ட குருதியில்
சபா.......! என்ற கூவலின் நீண்ட கேவல்!
மௌனத்தின் விறைப்பில், ஏமாந்த கோபத்தில்
மயூரன்...... என்ற வினோதமான விக்கல்!
என் இனிய உடன் பிறப்பே!
ஆசைத் தம்பியே!
ஆழகிய அந்த ஈழ பூமியில்
நீயெங்கே உறைந்து கொண்டாய்!

கடல் கடந்து வான் பறந்து
மலை தாண்டி மண் குதித்து
படை மீறி வந்தாலும்
நானுன்னை இனி எங்கு தேடுவேன்!
தம்பி! நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்!

கொடிய பசியுடன்
கூடவே தோழருமாய்
திடுமென்று என் வாசலை
தட்டிய போதெல்லாம்
நானிட்ட சாதமும் சாதாரண குழம்பும்
ருசியென்று உண்பாயே!
ஒரு கையில் சுமையேந்தி
மறுகையால் உதவிசெய்வாய்!
பிறர் கஷ்டம் பொறுக்காத
து}யவனே! மயூரா!
நானுன்னை இனி எங்கு தேடுவேன்?
நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்?

சந்திரா ரவீந்திரன்
லண்டன்


- 1.11.93 இல் பூநகரித் தாக்குதலில் வீரமரணமடைந்த என் அன்புத் தம்பி சபா (மயூரன்) வுக்காக -

நன்றி - எரிமலை (பிரசுரம் - ஆடி 1994 எரிம

0 comments: