
அண்ணனா..தீட்சண்யனா..?
எனக்குள் என்றும் உயிர்ப்புடன்
கிளைவிடும் பெரு விருட்சம் போல..!
அவ்வப்போது ஆறுதலுக்காய் ..
அதன் கீழ் நான்..!
மெல்லிய தென்றலென வருடும் ..
குளிர்ந்த இலைகள்..
துயரைத் துடைக்கும் கிளைகள்..
காற்றில் மோதியெழும் இனிய நாதமென..
எப்பவும் ரீங்கரிக்கும் கவிதை வரிகள்..
அல்ல..அல்ல..நீ உதிர்த்த வார்த்தைகள்!
வரிகளிற்குள் அடக்கிவிட முடியா மலைப்பு!
பேசியவை சில தான்..
பேசாமல் பேசவைத்தவை பல!
கைபற்றி அழைத்து..இன்னுமோர் அறிவுலகுள்
என் கால் பதிய வைத்த உன் காருண்யம்..
என் நெஞ்சு கரைகிறது..!
மலைப்பும் மகிழ்வும் நெருடலுமாய்....
கரைந்து...நெகிழ்ந்து..நாம்!
நீ மட்டும் கவிதை வரிகளிற்குள் ..
எப்பவும் அடங்கி விடாமல்..!!
- சந்திரா. இரவீந்திரன்
.


0 comments:
Post a Comment